மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கனிசமாக சரிந்திருந்தது. நீர் வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர் மட்டமும் சரிந்து வந்தது.
இந்நிலையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,186 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,336 கனஅடியாகவும் வியாழக்கிழமை காலை வினாடிக்கு 3,593 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.
நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. கடந்த இரு நாள்களாக 100 அடியாக நீடித்து வந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வியாழக்கிழமை காலை 100.15 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 65.03 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...