இத்தாலியில் கரோனா பாதிப்பு 2,29,327; பலி 32,735 ஆக உயர்வு
இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,327 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 32,735 ஆக அதிகரித்துள்ளது.


இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,327 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 32,735 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 32,735 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,29,327 -ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,38,840 ஆக உயர்ந்துள்ளது, இது வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடும்போது 2,120 அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 57,752 ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் 572 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வருகின்றனர், இது கடந்த வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடுகையில் 23 ஆக குறைந்துள்ளது, மேலும் 8,695 பேர் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதி செய்யப்பட்ட 48,485 பேரில் 84 சதவீதம் பேர் லேசான அறிகுறிகளுடன் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...