சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் அனுப்பியது பெரும் சர்ச்சையானது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை நீக்க வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்தன.
தமிழக அரசும், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என பதில் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று வீரப்பன் என்ற பெயரில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மேலும் அந்த கடிதத்தில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரப்பன் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.