ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிளேஆஃப் சுற்றில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சுத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 2வது பிளேஆஃப் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதில் வெல்லும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் தில்லி அணியுடன் மோதுவதற்கு தகுதிபெறும். நேற்றைய ஆட்டத்தில் வென்ற மும்பை அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.