ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அண்ணா தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் நியமனம்

அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அஇஅதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

News image
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
Updated On :12 நவம்பர் 2020, 4:37 pm

DIN

அண்ணா தொழிற்சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அஇஅதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

அஇஅதிமுகவின் கழக அமைப்புச் செயலாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன், கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளராக ஆர்.கமலக்கண்ணன் மற்றும் இணைச் செயலாளராக சி.கே.துளசிதாஸ் ஆகியோரை நியமித்துள்ளனர்.

மேலும், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் செயலாளராக கா.சங்கரதாஸ் மற்றும் இணைச் செயலாளராக எ.நூர்ஜஹான், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்களாக சி.திருமாறன் மற்றும் எஸ்.செல்வகுமார் ஆகியோரை அறிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.