தாணேவில் டிச.31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை
தாணே மாவட்டத்தில் கரோனா பரவல் குறையாத நிலையில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தாணே மாவட்டத்தில் கரோனா பரவல் குறையாத நிலையில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கரோனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளிகள் நவம்பர் 23 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தாணே மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2ம் அலைக்கான அச்சம் உள்ளதால், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இணையவழிக் கல்வி தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...