விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தேனியில் வாகன விபத்தில் உயிரிழந்தவர் மீது வழக்கு: உறவினர்கள் மறியல்

பெரியகுளம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மீது காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சாலை மறியலில் ஈடுபட்டோர்
Updated On :24 நவம்பர் 2020, 10:40 am

DIN

பெரியகுளம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மீது காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது கருத்தபாண்டி சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறை கருத்த பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கருத்த பாண்டியின் உடலை வாங்க வந்திருந்த அவரது உறவினர்கள் இந்த விபத்துக்கு காரணமானவர் கருத்தப்பாண்டி என காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு தேனி - மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த க.விலக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அளித்த  வாக்குறுதியினை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.