சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்படுகிறது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லும் மற்றும் வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.