அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

News image
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட பள்ளம்
Updated On :25 நவம்பர் 2020, 3:12 pm

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் எதிரே சாலையை கடப்பதற்காக இரும்புப் பாதை போடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய சாலையில் இருந்த இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பெய்து வந்த கனமழையால் அந்த பாலம் இடிந்து விழுந்து 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.