ஜம்மு-காஷ்மீரில் பாக். அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திங்கள்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில்,

“ஜம்மு-காஷ்மீரின் புஞ்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் வீரர்கள் சிறிய ரக துப்பாக்கிகளை பயன்படுத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்திய இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது” என தெரிவித்தார்.

இந்தாண்டு ஜனவரி மாதம்முதல் போர்நிறுத்த விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட 3,200க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com