மகாராஷ்டிரத்தில் 10 சதவீத காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரம் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத காவலர்களுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரம் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் 10 சதவீத காவலர்களுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிர காவல்துறையானது மிகப் பெரிய துறை, இதில் சுமார் 2 லட்சம் பேர் பணியில் உள்ளனர்.

கரோனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து மகாராஷ்டிர காவல்துறையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினம்போறும் அதிகரித்து வந்தது.

இந்நிலையில், இதுவரை 23 ஆயிரம் காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 25 உயர் அதிகாரிகள் உள்பட 247 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 2,956 பேர் சிகிச்சையில் உள்ளனர், அதில் 10 உயர் அதிகாரிகள் உள்பட 84 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும், 10,892 காவலர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com