திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைவு

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மின் உற்பத்தி 168 மெகாவாட்டிலிருந்து, 126 மெகாவாட்டாக குறைந்து வெள்ளிக்கிழமை உற்பத்தியானது.

News image
லோயர்கேம்ப்
Updated On :2 அக்டோபர் 2020, 10:28 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மின் உற்பத்தி 168 மெகாவாட்டிலிருந்து, 126 மெகாவாட்டாக குறைந்து வெள்ளிக்கிழமை உற்பத்தியானது.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா 42 மெகாவாட் என 168 மெகாவாட் மின்சார உற்பத்தி வியாழக்கிழமை வரை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மூன்று மின்னாக்கிகள் மட்டும் தலா 42 மெகாவாட் என 126 மெகாவாட் உற்பத்தியானது.

அணை நிலவரம்

முல்லைப்பெரியாறு அணைக்குள் வெள்ளிக்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 130.30 அடி உயரமாகவும், நீர் இருப்பு 4,767 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 593 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1400 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் மழை பொழிவு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.