அத்திக்கடவு திட்டப்பணிகள் விரைவாக நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் விடுபட்டுள்ள குட்டைகளை சேர்க்க வேண்டும் என பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுபட்ட குட்டைகளை சேர்ப்பது குறித்த தெளிவான விளக்கம் அரசிடம் இருந்து, இதுவரை வரவில்லை. அரசு, விடுபட்ட குட்டைகளுக்கு உடனடியாக திட்ட அறிக்கை தயார் செய்து, இதற்கு நிதியும் ஒதுக்க வேண்டும். குறிப்பரா தொரவலூர் ஊராட்சியில் ஒரு குட்டை கூட அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இடம் பெறவில்லை. இத்திட்டம் நிறைவேறுவதற்காக அவிநாசியில், நடைபெற்ற 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்த 14 பேரில் 3 பேர் தொரவலூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.