‘ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை இழந்தனர்’ : ராகுல் இரங்கல்

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நுகர்பொருள் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ராம்விலாஸ் பாஸ்வான், சில தினங்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பஸ்வான் வியாழக்கிழமை புதுதில்லியில் காலமானார்.

அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

ராம் விலாஸ் பாஸ்வான் ஜியின் மரணம் குறித்த செய்தி வருத்தமளிக்கிறது. ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டோர்கள் தங்களின் வலுவான அரசியல் குரலை இன்று இழந்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com