தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தவரின் கையை வெட்டிய பெண்
ஆந்திரத்தில் தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்யதவரின் கையை அரிவாளால் ஒரு பெண் வெட்டியுள்ளார்.


ஆந்திரத்தில் தன் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்யதவரின் கையை அரிவாளால் ஒரு பெண் வெட்டியுள்ளார்.
சித்தூர் மாவட்டத்தின் திருமலரெடிபள்ளி கிராமத்தில் 15 வயது சிறுமி கால்நடைகளை மேய்பதற்காக காட்டுக்குள் சென்ற போது சங்கரப்பா என்ற தொழிலாளி அப்பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அச்சிறுமியின் அலறல் சத்ததைக் கேட்டு, சிறுமியின் மூத்த சகோதரி அவளுக்கு உதவ சென்றுள்ளார். அப்போது, சங்கரப்பாவின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு தனது சகோதரியை அவரிடம் இருந்து காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், சங்கரப்பா அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், சங்கரப்பாவை காவல்துறையினர் கைது செய்து பாலியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...