/

அவசர சேவைகளுக்கு மட்டுமே செயல்படும்: அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு

கரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அவசர சேவைகளுக்கு மட்டுமே செயல்படும் என புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:37 pm

DIN

கரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அவசர சேவைகளுக்கு மட்டுமே செயல்படும் என புதன்கிழமை அறித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், 

அபுதாபி இந்திய தூதரகத்தில், நவம்பர் மாதத்தோடு பாஸ்போர்ட் மற்றும் அரபில் குடியிருப்பதற்கான அனுமதி ஆகிய சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க மறு அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், அவசரமாக பாஸ்போர்ட் தேவைப் படுவோர்கள் தூதரகத்தின் இணைய தளத்தில் உள்ள மின்னஞ்சலுக்கு ஆவணங்களை அனுப்பலாம். 

தூதரகம் இதுபோன்ற அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதிலளித்து தேவையான தூதரக சேவையை வழங்கும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.