வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 109 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள்

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 109 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News image

ஹைதராபாதில் மீட்புப் பணியில் என்.டி.ஆர்.எஃப். குழு

Updated On :15 அக்டோபர் 2020, 2:34 pm

ANI

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 109 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை வெளியிட்ட செய்தியில்,

நவீன மீட்பு உபகரணங்களுடன் என்.டி.ஆர்.எஃப் இன் 109 குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அவசர கால மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அவற்றில் 24 குழுக்கள் முழுமையான அதிநவீன கருவிகளுடன் தெலங்கானா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் நான்கு என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று, என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் ஹைதராபாத் மற்றும் ரங்கரெட்டி மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளனர். அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.