6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா வெள்ளத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம்: முதல்வர்

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

News image
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்
Updated On :15 அக்டோபர் 2020, 12:22 pm

ANI

தெலங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கனாவில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் தலைநகரம் ஹைதராபாத் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 32 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா முதல்வரிடம் பிரதமர் மோடி புதன்கிழமை பேசுகையில் வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் எழுதிய சுட்டுரையில் கூறியதாவது,

மாநிலங்களில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1,350 கோடி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.