6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் மழையால் 28 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 பேர் பலியானதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதி
Updated On :16 அக்டோபர் 2020, 9:43 am

PTI

மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 பேர் பலியானதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

புணே மண்டல ஆணையர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 2,300 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பெரிய அளவிலான பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 21 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர், இதில் சோலாப்பூரில் 14 பேரும், சாங்லியில் 9 பேரும், புனேவில் 4 பேரும், சதாராவில் ஒருவரும் பலியாகியுள்ளனர். மேலும், புனேவில் ஒருவரை இன்னும் காணவில்லை என தெரிவித்தார்.

புனே, சோலாப்பூர், சதாரா மற்றும் சாங்லி ஆகிய மாவட்டங்களில் 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு, சோயாபீன், காய்கறிகள், அரிசி, மாதுளை மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இப்பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சுமார் 513 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.

சோலாப்பூர் (17,000 பேர்), சாங்லி (1,079 பேர்), புணே (3,000 பேர்) மற்றும் சதாரா (213 பேர்) மாவட்டங்களில் உள்ள 6,061 வீடுகளைச் சேர்ந்த 21,292 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.