தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை மூடல் : லாரி ஓட்டுநர்கள் தவிப்பு

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

News image
நெடுஞ்சாலையை கடக்க காத்திருக்கும் லாரிகள்
Updated On :16 அக்டோபர் 2020, 10:18 am

ANI

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது. இந்நிலையில், கலாபுராகி மாவட்டத்தில் பீமா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவ்வழியே கடக்கும் தேசிய நெடுஞ்சாலை 50 யின் பாலம் காவல்துறையால் மூடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லவேண்டிய லாரி மற்றும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 2 நாள்களாக இந்த இடத்தில் காத்துக்கொண்டுள்ளோம், மேலும் சாப்பிட உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் தவித்து வருகின்றோம். நதியின் நீர் பாலத்திற்கு 6 அடி கீழே தான் உள்ளது, இருப்பினும் எங்களை கடக்க அனுமதிக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை பொறியாளர் ஜெகநாத் ஹலிங்கே கூறுகையில், கலபுராகி மாவட்டத்தின் அப்சல்பூரில் உள்ள சோமா பாரேஜிலிருந்து பீமா நதிக்கு 6,30,000 டி.எம்.சி. நீர் இன்று மாலை 3 மணிக்கு வெளியேற்றப்பட்டது, விரைவில் நீர்மட்டம் குறைந்தவுடன் நெடுஞ்சாலை திறக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.