டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களுக்கு 2 நாள் பயணமாக நாளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் உள்ள ராணுவ தளங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்வார்.
பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்களுடன் இணைந்து தசரா விழாவை கொண்டாடவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.