இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

6 மாதங்களுக்கு பிறகு தேக்கடியில் படகு சவாரி தொடக்கம்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி  தொடங்கியது.

News image

6 மாதங்களுக்கு பிறகு தேக்கடியில் படகு சவாரி தொடக்கம்

Updated On :5 செப்டம்பர் 2020, 12:42 pm

கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி  தொடங்கியது.

தேனி மாவட்டம் அருகே உள்ளது சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரி. இங்கு படகு சவாரி செய்வதை உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவார்கள்.

கடந்த மார்ச் 10-ல் கரோனா தொற்று காரணமாக, தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது, தற்போது  சுமார் 6 மாதங்களுக்கு பிறகு, சனிக்கிழமை இரண்டு படகுகள் இயக்கப்பட்ட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினர் அறிவித்தனர்.

அதன்பேரில் சனிக்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு மதியம் மூன்று முப்பது மணிக்கு என இரண்டு படகுகள் இயக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகுகள் இயக்கப்பட்டதால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்தனர்.

வனத்துறையினர் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் சமூக இடைவெளியை பயன்படுத்துதல் போன்றவைகளை படகு சவாரியின் போது அறிவுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.