ஆப்கனில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வியாழக்கிழமை 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை
ஆப்கானில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்கள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வியாழக்கிழமை 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் படை வெளியிட்ட அறிக்கையில்,

கலந்தர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிகளை வியாழக்கிழமை இரவு தலிபான்கள் தாக்கினார்கள். இதையடுத்து ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதேபோல், சபரி மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து போர் விமானம் தாக்கியதில் 12 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மேலும், இந்த அறிக்கையில் ஆப்கான் படைகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்த செய்தியும் தெரிவிக்காமல், தலிபான்கள் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றும் வரை ஆப்கான் படையின் ஒடுக்குமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com