ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கடன் பிரச்னையால் சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதி : ரூ. 17 லட்சம் இழந்து சோகம்

ஆந்திரத்தில் கடன் பிரச்னையால் ரூ. 2 கோடிக்கு சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதிகள் சேவைக் கட்டணமாக ரூ. 17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :15 செப்டம்பர் 2020, 11:54 am

DIN

ஆந்திரத்தில் கடன் பிரச்னையால் ரூ. 2 கோடிக்கு சிறுநீரகத்தை விற்க முயன்ற தம்பதிகள்  சேவைக் கட்டணமாக ரூ. 17 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காமேஸ்வர் மற்றும் பார்கவி என்ற தம்பதியர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் சொந்தமாக மருந்துக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் மருந்துக்கடையில் ஏற்பட்ட நஷ்டத்ததால், அந்தக் கடனை திரும்ப செலுத்த சிறுநீரகத்தை விற்க முயன்றனர்.

இந்நிலையில் சிறுநீரகம் விற்க புதுதில்லியில் உள்ள சக்ரா மருத்துவமனை ஒன்றைக் கண்டார்கள். இதில், சோப்ரா சிங் என்ற இடைத்தரகருடன் இணையத்தில் பேரத்தில் ஈடுபட்டனர். இதில், இறுதியாக ஒரு சிறுநீரகத்திற்கு ரூ. 2 கோடி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மேலும், ரூ. 2 கோடி பணத்தை அறுவை சிகிச்சைக்கு பின் வாங்கி தருவதாகவும், தற்போது நீங்கள் ரூ. 17 லட்சம் சேவைக் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்து, தம்பதியினர் மேலும் கடன் வாங்கி கொடுத்துள்ளார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்தை முடிக்க மேலும் ரூ. 5 லட்சம் கேட்டதை அடுத்து காமேஸ்வரன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.