மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருந்த வீரர்கள் 4,132 பேர் பலி

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2020, 2:45 pm

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் பணியில் இருக்கும் போது 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதில், அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 1,597 பேர், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 725 பேர், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 671 பேர், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 429 பேர், அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த 329 பேர் மற்றும் சாஸ்திர சீமா பால் படைடைச் சேர்ந்த 381 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.