எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2020, 1:02 pm

ANI

இந்திய முப்படைகளில் இதுவரை 19,839 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் கூறுகையில், 

இந்திய முப்படையான ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளை சேர்ந்த 19,839 பேர் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில், ராணுவப் படையைச் சேர்ந்த 16,758 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 32 பேர் பலியாகியுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த 1,365 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் பலியாகியுள்ளனர். விமானப் படையைச் சேர்ந்த 1,716 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவால் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.