அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கனில் 13 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :24 செப்டம்பர் 2020, 11:24 am

ANI

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புப்படை அதிகாரி ஷாப்பூர் அஹமட்ஸாய் கூறுகையில்,

ஆப்கானிஸ்தான் கிழக்கு லோகர் மாகாணத்தின் கர்வார் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை வீரர்கள் இணைந்து புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் 13 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலானது, தலிபான்களை அப்பகுதியில் இருந்து அகற்றும் வரை நடைபெறும் என தெரிவித்தார்.

இதுகுறித்து தலிபான்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.