ஒடிசாவில் தனது மகனின் நண்பனான 14 வயது சிறுவனை ரூ. 500 திருடியதாகக் கூறி அடித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாபனோபோஷி கிராமத்தில் ராஜன் பெஹெரா (வயது14) என்ற ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது நண்பன் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.
அங்கு சிறிது நேரம் விளையாடிய ராஜன் தன் வீட்டிற்கு திரும்பிச் சென்றுள்ளார். இதன்பின், நண்பனின் தாயாரான சஸ்மிதா பெஹெரா (36) வீட்டிலிருந்த ரூ. 500 காணவில்லை என தனது மகனிடம் விசாரித்துள்ளார்.
இதன்பின், ராஜனை அழைத்து குச்சியால் அடித்து விசாரித்துள்ளார் சஸ்மிதா. இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய ராஜன் பலத்த காயத்தால் சற்று நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த கிராமவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சஸ்மிதா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


