சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் மாவட்ட ரிசர்வ் காவல்படையால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார் என ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 செப்டம்பர் 2020, 10:32 am

ANI

சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் மாவட்ட ரிசர்வ் காவல்படையால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார் என ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் பெடபால்-பிடியா வனப்பகுதிக்கு அருகே இன்று காலை மாவட்ட ரிசர்வ் காவல்படை நடத்திய சோதனையில் அடையாளம் தெரியாத நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கையை டி.ஆர்.ஜி, சிறப்புப் படை(எஸ்.டி.எஃப்), கமாண்டோ பட்டாலியன் ஆஃப் ரெசோலூட் ஆக்சன் (கோப்ரா) மற்றும் பிஜாப்பூர் மற்றும் தாந்தேவாடா மாவட்டங்களின் மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) குழுக்கள் இணைந்து நடத்தியது.

கடந்த இரண்டு நாட்களில், பெடியா, டுமார், பெடபால் மற்றும் ஈரானார் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இந்த நடவடிக்கை இப்பகுதியைச் சுற்றி தொடரும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.