எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்பிய 40 ஆயிரம் தொழிலாளர்கள்

கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :30 செப்டம்பர் 2020, 2:23 pm

ANI

கரோனா பொது முடக்கத்தால் வேலை இழந்த இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து நேபாள எல்லைக் காவல்துறை அதிகாரி பிஷ்னு கிரி கூறுகையில்,

கரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்த இந்திய தொழிலாளர்கள் நேபாள்குஞ்ச் இதுவரை 40 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிற்கு வேலைக்காக புலம்பெயர்ந்து சென்ற நேபாள மக்கள் 76,048 பேர் இதுவரை நேபாளத்திற்கு திரும்பியுள்ளனர்.

இதில், கடந்த 4 வாரங்களில் மட்டும் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை காண்பித்து, நாடு திரும்பியாதாக தெரிவித்தார். 

இந்திய-நேபாள எல்லையைக் கடந்து செல்ல, பரிந்துரை கடிதம் மற்றும் அவர்களின் அடையாள அட்டையைக் காட்டினால் கடக்க முடியும் என கூறினார்.

பெரும்பாலும் நேபாளத்தில் இருந்து டாங், பாங்கே, பார்தியா, ஜாஜர்கோட், சுர்கேத், டெயிலேக், ஜும்லா, சல்யான், ருகும், காளிகோட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.