சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

கேரளத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கேரளத்தில் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2021, 3:18 pm IST

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு கேரளத்தில் வெள்ளிக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்ப் பரவலால் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 300க்கும் அதிகமானோர் இருக்கும் பள்ளிகளில் 25 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும்.

பள்ளி நேரமானது, காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை மற்றும் மதியம் 1.15 மணிமுதல் மாலை 5.15 மணிவரை என இரண்டு பிரிவுகளாக பிரித்து நடத்த வேண்டும் என அறிவித்துள்ளனர்.

மேலும், ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17 முதல் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.