அவிநாசி: பெருமாநல்லூர் அருகே துணி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் தீபத்தில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேமடைந்தது.
பெருமாநல்லூர் அய்யம்பாளையம் அருகே பொங்குபாளையம் பகுதியில் துணி உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை காலை இந்நிறுவனம் வழக்கம் போல இயங்கத் துவங்கியது. புதன்கிழமை மாலை, திடீரென இந்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தீ மிக வேகமாக பரவி அங்கு அடுக்கி வைத்திருந்த துணி, நூல், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரியத் துவங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை விரைந்து அணைத்து வருகின்றனர். இருப்பினும் உள்ளிருந்த இயந்திரங்கள், துணி, நூல் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானது.
மேலும் இவ்விபத்தில் தொழிலாளர்கள் அதிர்ஷடவசமாக எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மண்டகொளத்தூா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையில் நவீன எரிவாயு தகன மேடை தொடக்கம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


