சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று(வியாழக்கிழமை) மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று மாலை 6.40 மணியளவில், மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கிற்காக சபரிமலையின் நடை மூன்று மாதங்கள் திறக்கப்படும். அந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
நிகழ்வாண்டில் கரோனா காரணமாக முதலில் தினந்தோறும் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. பின் 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கரோனா பரிசோதனை சான்றிதழ் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கின் முக்கிய நிகழ்வான மகரஜோதி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
மகரஜோதி நிகழ்வு இன்று(ஜன.14) மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மேட்டில் 3 முறை ஒளிர்ந்தது. பின், ஐயப்பன் சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
வரும் 19ஆம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை திறந்திருக்கும். அடுத்த நாள் கோயில் நடை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வாண்டில், 54 நாட்களில் 1,32,673 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். ரூ. 16.30 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்தியா, வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வு!

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




