கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு நிறைவு
கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.


கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
கேரளம், அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் நடைபெற்றது. மாலை 6 மணிமுதல் 7 மணிவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களித்த பின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தற்போதைய நிலவரப்படி அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக 82.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கேரளம்:
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி நிலவரப்படி, 69.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம்:
அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் இறுதி கட்டத்தில் மாலை 6.30 மணி நிலவரப்படி 82.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்குவங்கம்:
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் 3ஆம் கட்டத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...