சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா அதிகரிப்பு: கேரள அமைச்சர்

கேரளத்தில் தேர்தலின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரளத்தில் தேர்தலின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில், கேரளத்தில் மட்டும் கணிசமாக குறைந்து வந்தது. இருப்பினும் கடந்த சில நாள்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது,

கேரள சட்டப்பேரவை தேர்தலின்போது சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாததால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com