ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி வருகின்றது.
இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.