சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் எப்படி?

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் வழங்கும் முறை குறித்து மத்திய கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

News image

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு மதிப்பெண் எப்படி?

Updated On :14 ஏப்ரல் 2021, 9:16 am

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் வழங்கும் முறை குறித்து மத்திய கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்திருப்பது,

வகுப்பறை செயல்பாட்டின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் தயாரிக்கப்படும். அந்த மதிப்பெண் மாணவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், தேர்வு நடத்துவதற்கான உரிய காலம் வரும்போது தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.