ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வெளியிலிருந்து வரும் பாஜகவினரால் தான் கரோனா அதிகரிப்பு: மம்தா குற்றச்சாட்டு

வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :16 ஏப்ரல் 2021, 11:43 am

ANI

வெளி மாநிலங்களிலிருந்து கரோனா பரிசோதனை செய்யாமல் வரும் பாஜகவினரால் தான் மேற்குவங்கத்தில் கரோனா அதிகரித்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் மட்டும் நாள்தோறும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நோபாரா பிரசாரத்தில் மம்தா பேசியது,

தேர்தல் பிரசாரத்திற்காக வெளி மாநிலங்களிலிருந்து பரிசோதனை செய்யாமல் பாஜகவினரை அழைத்து வந்ததால், கடந்த 5 மாதங்களாக இல்லாத கரோனா தொற்று தற்போது அதிகரித்துள்ளது.

வெளியில் இருந்து வருபவர்கள் பரப்பும் கரோனாவால் எங்கள் மக்கள் பலியானால், அதற்கும் எங்களை குறை கூறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.