உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு விவசாய சங்கத் தலைவர் ஐயா கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு விவசாய சங்கத் தலைவர் ஐயா கண்ணு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே டி.என்.டி. சீர்மரபினர் நல வாரிய சங்கத்தினர் டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் வழங்கக்கோரியும், டி.என்.டி. ஜாதிக்கணக்கு எடுக்கக் கோரியும், டி.என்.டி. இரட்டைச் சான்றிதழ் வேண்டாம் எனவும் சீர்மரபினர் நல வாரியம் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழக அரசு கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சாலையில் படுத்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சீர்மரபினர் சங்கத்தினர் ஆதிசேடன், தவமணி அம்மாள் மற்றும் நல வாரியத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனார்.
இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஐயா கண்ணு உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு தாலுகா காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...