‘மேற்குவங்க பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு’: அமித்ஷா
மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 5வது கட்ட பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அதில் அவர் பேசுகையில்,
மேற்குவங்கத்தை சொர்க்கவங்கமாக மாற்றுவதற்கான பாஜகவின் போராட்டம் இது. மம்தாவின் ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே எங்கள் நோக்கம் இல்லை. மேற்குவங்கத்தின் நிலைமை, ஏழைகளின் நிலைமை, மாநில பெண்களின் நிலைமை மாற்றம் செய்வதை உறுதி செய்வதே எங்களின் குறிக்கோள்.
மேற்குவங்கத்தில் உள்ள பெண்களுக்கு அரசுப் பணிகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...