

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மகளை ஓமானில் இருந்து அழைத்து வர உதவுமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஃபர்ஹீன் பேகம் என்ற பெண்ணிற்கும் ஓமன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தங்களது மகளை, அவரது கணவர் கொடுமைபடுத்துவதால் இந்தியா மீட்டு வர உதவுமாறு மத்திய அரசிற்கு பெண்ணின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஃபர்ஹீன் பெற்றோர் கூறுகையில்,
எங்களது மகளுக்கு திருமணமாகி 5 நாள்களுக்குள் மஸ்கட் அழைத்து செல்லப்பட்டார். அங்கு சென்ற பிறகு தான் அவரது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. ஃபர்ஹீனை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி வருகிறார். எனவே, எங்களது மகளை விரைவில் இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.