புதுவை சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 
புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை
Published on
Updated on
1 min read

புதுச்சேரியின் சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவையானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் சட்டப்பேரவை கூடியது.

இந்த கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண் சட்ட நகல்களை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையின் போது கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குமுன் பஞ்சாப், கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com