ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கூடலூரில் கவனயீர்ப்பு பேரணி: காவலர்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்

கூடலூரில் லோயர் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரியும் மாற்றுத் திட்டத்தை அறிவிக்க கோரியும் கவனயீர்ப்பு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

News image
கூடலூரில் கவனயீர்ப்பு பேரணி
Updated On :25 ஜனவரி 2021, 1:27 pm

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் லோயர் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரியும் மாற்றுத் திட்டத்தை அறிவிக்க கோரியும் கவனயீர்ப்பு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது காவலர்களுக்கும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கூடலூரில் அனைத்து சமுதாய பொதுமக்கள் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் திங்கட்கிழமை கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை கைவிடக் கோரி மாற்று திட்டமான வைகை அணையில் தூர்வாரவும், அல்லது ராமநாதபுரம் தொண்டியிலிருந்து இருந்து கடல் நீரை குடிநீராக்கி மதுரைக்கு வழங்கும்  திட்டத்தை அமல்படுத்த கோரியும் பேரணி நடைபெற்றது.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவரும் வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவருமனஎம் கே எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில் ஆண்-பெண் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மாற்று திட்டத்தை அறிவிக்க கோஷமிட்டனர்.

பின்னர் பேரணி, கூடலூர் குமுளி சாலையில் உள்ள கூலிக்காரன் பாலத்தில் முடிவடைந்தது. மாற்று திட்டத்தை அறிவிக்கும் வரை தொடர் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக பேரணி துவங்குவதற்கு முன்பு கூடலூர் காவல் ஆய்வாளர் முத்துமணி விவசாயிகளிடம் பேரணியை தொடங்குமாறு கேட்டார், அப்போது கூட்டமைப்பு தலைவரும், வழக்குறைஞருமான எம்.கே.எம். முத்துராமலிங்கத்திற்கும் காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு  சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் பேரணி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.