ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 6 பேர் பலி

கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

News image
கடலூரில் ஏரியில் மூழ்கி 6 பேர் பலி
Updated On :26 ஜனவரி 2021, 1:44 pm

DIN

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் விவேகன் (3), அதே பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் மகன்கள் விக்னேஸ்வரன் (3), சர்வேஸ்வரன் (3). இவர்கள் இரட்டையர்கள். திங்கள் கிழமை மாலையில் மூன்று பேரும் அந்த பகுதியில் விளையாடி உள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள குளத்தின் கரையில் குழந்தைகள் நடந்து சென்ற கால் தடங்கள் இருந்தன. எனவே குளத்தில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், திங்கட்கிழமை இரவில் சர்வேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்றொருவரை தேடும் பணி நள்ளிரவை தாண்டியதும் நிறுத்தப்பட்டு இன்று காலையில் துவங்கியது. அதில் விவேகனும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      
 

மற்றொரு சம்பவம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூரைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (19),  லட்சபூபதி மகள்கள்
நந்தினி (18), வினோதினி (16). மூன்று பேரும் இன்று மதியம் ஏ.புதூர் - சித்தேரி குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

தகவலறிந்த காடாம்புலியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணைக்கு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.