தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா காரணமாக இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6,26,74,446 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,08,38,473; பெண் வாக்காளர்கள் 3,18,28,727 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 12.91 லட்சம் பேர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சத்யபிரதா சாஹு கூறியதாவது,
தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12.91 லட்சம் பேர் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,08,718 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 வாக்காளர்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.