போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காங்கயம் தொகுதியை ஒதுக்க புதிய நீதிக் கட்சி கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
கூட்டத்தில் பேசுகிறார் பு.நீ.க ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.தங்கத்தம்பி.
Updated On :2 மார்ச் 2021, 2:34 pm

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

வெள்ளக்கோவிலில் புதிய நீதிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் கே.தங்கத்தம்பி தலைமை வகித்தார். கட்சி மாநில அமைப்புச் செயலாளர்கள் வெள்ளக்கோவில் சௌந்தரராஜன், கவுந்தப்பாடி அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காங்கயம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இவற்றில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் உள்ளனர். எனவே முதலியார் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு காங்கயம் தொகுதியை ஒதுக்க வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.