டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

‘மேற்குவங்க தேர்தலில் சிவசேனை போட்டியிடாது’: சஞ்சய் ரெளத்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத்
Updated On :4 மார்ச் 2021, 9:25 am

ANI

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், இத்தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத்தின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மேற்குவங்க தேர்தலில் சிவசேனை போட்டியிடுமா, போட்டியிடாதா என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளீர்கள்.

அதுகுறித்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், மம்தா அனைத்து கட்சிக்கு எதிராகவும் போராடி வருகிறார். பணபலம் உடையவர்கள் மற்றும் ஊடகங்கள் என அனைத்தும் மம்தாவுக்கு எதிராக உள்ளது.

எனவே, இத்தேர்தலில் மம்தாவின் திரிணமூல் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். இந்த தேர்தலில், சிவசேனை போட்டியிடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.