‘என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’: புதுவை பாஜக பொறுப்பாளர்

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
நிர்மல் குமார் சுரானா(படம்: டிவிட்டர்)
நிர்மல் குமார் சுரானா(படம்: டிவிட்டர்)
Updated on
1 min read

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையேயான கூட்டணி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என புதுவை பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி குறித்து கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை குறித்து நிர்மல் குமார் சுரானா கூறுகையில்,

பாஜக - என்.ஆர். காங்கிரசு இடையிலான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com