கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாநிலங்களவை துணைத்தலைவர்

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாநிலங்களவை துணைத்தலைவர்
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மாநிலங்களவை துணைத்தலைவர்
Updated on
1 min read

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், வியாழக்கிழமை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் இதுவரை 2.50 கோடி பேர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com