பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் தாய்-மகள் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்

கடலூர் அருகே மனைவி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொன்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image
மகள் மீனா மற்றும் தாய் பூங்கொடி
Updated On :15 மார்ச் 2021, 3:54 pm

DIN

கடலூர் அருகே மனைவி மற்றும் அவரது தாயை வெட்டிக் கொன்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் சலங்கைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் ரவி மனைவி பூங்கொடி (48). இவர்களது மகள் மீனா (30).

இவருக்கும் அருகிலுள்ள சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருணம் நடந்துள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் மீனா தனது தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் நம்புராஜ், தனது மாமியார் வீட்டிற்குச் சென்று சமாதானம் பேசியுள்ளார். இதில், உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால், ஆத்திரத்திலிருந்த அவர் இருவரையும் பின்தொடர்ந்து சாலையில் சென்ற போது இருவரையும் சராமாரியாக கையில் வைத்திருந்த கத்தியால் வெட்டியுள்ளார்.

இதில், இருவரும் பலத்த அலறல் சத்தத்துடன் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட நம்புராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.

தகவலறிந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய நம்புராஜை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.